தமிழக ஹயர் கூட்ஸ் தொழிலாளர்களின் நலனுக்காக தனியாக வாரியம் அமைக்க கோரிக்கை

கோவை: தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது.

கோவை: தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது.

திருமணங்களுக்கு மட்டுமின்றி பல்வேறு விழாக்களுக்கு சமையல் பாத்திரங்கள், ஜென்சென்ட், ஒலி, ஒளி அமைப்பு, மேடை அமைப்பாளர்கள், அலங்காரம், சாமியானா உள்ளிட்ட பொருட்களை வாடகை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் விடுபவர்கள் இணைந்து, ‘தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்கம்’ நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா, கோவை, தடாகம் ரோட்டில் உள்ள அக்சயா கார்டனில் நடந்தது. 

இந்த கூட்டத்தில், மாநில தலைவராக எஸ். பழனிசாமி, மாநில பொது செயலாளராக மணிமாறன், மாநில பொருளாளராக எஸ். பால்ராஜ், மாநில அமைப்பு செயலாளராக தஞ்சை ஆர். சிவா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில், மாநில தலைவராக பதவி வகித்த, எம்.பரமேஸ்வரன், மாநில பொருளாளராக இருந்த தினகரன் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். 

இந்த கூட்டத்தில், ஹயர் கூட்ஸ் தொழிலாளர்களின் நலனுக்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டும், ஒலி, ஒளி, ஜென்செட் பந்தல் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் எடுத்துச் செல்லும் போது உடன் இரண்டு பேர் செல்ல போலீசார் அனுமதிக்க வேண்டும், ஜி.எஸ்.டி வரி விதிப்பை 18 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கலந்து கொண்ட ராகவேந்திரா, செந்தில் ராஜ், மெலடிஸ் ராஜன், அக்ஷயா கார்டன் சுந்தர்ராஜன், ட்ரிபிள் எக்ஸ் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...