கோவை: எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வால்பாறையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வால்பாறையில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழா இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் வால்பாறையில் ரொட்டிக்கடை பஜாரில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு வால்பாறை அ.ம.மு.க நகர செயலாளர் நெல்லை செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் குஞ்சாலி, செல்வின் லாய், பாபுஜீ, மகளிரணி தனலட்சுமி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல, அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வால்பாறை அ.தி.மு.க நகர செயலாளர் அலுவலகத்தில் நகர செயலாளர் எம் மயில் கணேசன், நரசப்பன், மிக்சர் கடை முருகன், சௌந்தரராஜன், ஏக சிவநாதன் எஸ்.கே.எஸ் பாலு, சீனி ராஜ், லோகேஸ்வரன், ராமர் செல்லையா, பாக்கியராஜ், ஜெயராமன், காஜாமைதீன் மற்றும் கழக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர்.