கோவை: மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சிறப்பு பொங்கல் வைத்து யானை பொங்கல் விழா நடைபெற்றது
கோவை: மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சிறப்பு பொங்கல் வைத்து யானை பொங்கல் விழா நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15ம் துவங்கி நடைபெற்று வருகின்றது. 28 யானைகள் கலந்து கொண்டு உள்ள இம்முகாமில் யானைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று யானைகள் நலவாழ்வு முகாமில் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு முகாமில் உள்ள யானைகளுக்கு யானை பொங்கல் வைத்து, விழாவினை அதிகாரிகள் மற்றும் யானை பாகன்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

யானைகள் பவானி ஆற்று நீரில் புனித நீராடி முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக வரிசையாக நிறுத்தப்பட்டு யானைகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து பாகன்களுக்கு புத்தாடையும் வழங்கி அர்ச்சகர்களைக் கொண்டு கஜ பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து புது பானையில் பச்சரிசி வெல்லம் இட்டு பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கி வந்த போது யானைகள் பிளிரி சத்தமிட்டு பொங்கலை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து யானைகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழை பழங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு யானை பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த யானை பொங்கல் முகாமை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15ம் துவங்கி நடைபெற்று வருகின்றது. 28 யானைகள் கலந்து கொண்டு உள்ள இம்முகாமில் யானைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று யானைகள் நலவாழ்வு முகாமில் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு முகாமில் உள்ள யானைகளுக்கு யானை பொங்கல் வைத்து, விழாவினை அதிகாரிகள் மற்றும் யானை பாகன்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

யானைகள் பவானி ஆற்று நீரில் புனித நீராடி முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக வரிசையாக நிறுத்தப்பட்டு யானைகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவித்து பாகன்களுக்கு புத்தாடையும் வழங்கி அர்ச்சகர்களைக் கொண்டு கஜ பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து புது பானையில் பச்சரிசி வெல்லம் இட்டு பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் பொங்கி வந்த போது யானைகள் பிளிரி சத்தமிட்டு பொங்கலை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

இதனை தொடர்ந்து யானைகளுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழை பழங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு யானை பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த யானை பொங்கல் முகாமை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர்.