கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9,41,238 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு, 1418 ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9,41,238 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு, 1418 ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, 1000 ரூபாய் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் பொங்கல் தொகுப்பாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
கோவை மாவட்டத்தில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 88 ஆயிரத்து 923 பயனாளிகளுக்கு விலையில்லா சேலைகளும், 6 லட்சத்து 84 ஆயிரத்து 468 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பொருட்கள் 21ம் தேதி வரை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் எவ்வித தடங்கலின்றி பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 41 ஆயிரத்து 238 ரேசன் கார்டுகளுக்கு அதாவது 97 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, 1000 ரூபாய் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் பொங்கல் தொகுப்பாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
கோவை மாவட்டத்தில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 88 ஆயிரத்து 923 பயனாளிகளுக்கு விலையில்லா சேலைகளும், 6 லட்சத்து 84 ஆயிரத்து 468 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பொருட்கள் 21ம் தேதி வரை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் எவ்வித தடங்கலின்றி பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 41 ஆயிரத்து 238 ரேசன் கார்டுகளுக்கு அதாவது 97 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.