சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

கோவை: கோவை அடுத்த சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை அடுத்த சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி வனத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. 

இந்த வனத்தில் சிறுத்தை, யானைகள், கரடிகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், இன்று காலை திம்பம் மலைப்பாதை 11வது கொண்டை ஊசி வளைவில் சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்தது. 

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த சிறுத்தைப்புலியை மீட்டு வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்தபோது வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...