நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் திம்மன் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் திம்மன் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மெட்டுக்கல் இருளர் இன கிராமத்தில் 20க்கும் குறைவான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் மேரக்காய் பயிரிட்டுள்ளனர். இவற்றை பாதுகாப்பதற்காக ராமச்சந்திரன் மற்றும் திம்மன் ஆகியோர் நேற்று இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மறுநாள் காலை பார்க்கும் பாேது இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இப்பகுதி வனப்பகுதி என்பதால் சாதாரண காவலர்கள் சென்று வருவதில் சிக்கல் உள்ளதாலும், நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அதிரடிப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காேத்தகிரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாபு(50), குமார்(41), குமார்(55), மூர்த்தி (39), கிருஷ்ணன்(40), மகேந்திரன்(41) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மெட்டுக்கல் இருளர் இன கிராமத்தில் 20க்கும் குறைவான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் மேரக்காய் பயிரிட்டுள்ளனர். இவற்றை பாதுகாப்பதற்காக ராமச்சந்திரன் மற்றும் திம்மன் ஆகியோர் நேற்று இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மறுநாள் காலை பார்க்கும் பாேது இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இப்பகுதி வனப்பகுதி என்பதால் சாதாரண காவலர்கள் சென்று வருவதில் சிக்கல் உள்ளதாலும், நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அதிரடிப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காேத்தகிரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாபு(50), குமார்(41), குமார்(55), மூர்த்தி (39), கிருஷ்ணன்(40), மகேந்திரன்(41) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.