திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக மருமகள் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக மருமகள் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த யுகாஷினி(22) என்பவர் இன்று அவரது குழந்தை மற்றும் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் எனது கணவர் கலையரசனுடன் வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது மாமியார் ருக்குமணி, வரதட்சணைக் கேட்டு தொடர்ந்து தொல்லை தந்து வருகிறார். ஏற்கனவே கணவருக்கு அரசாங்க வேலை வாங்குவதாக ஒன்றரை லட்சம் கேட்டார். அதன்பின்னர் கடன் இருந்ததற்காக நகைகளை கேட்டு வாங்கினார். தற்போது, மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ. 2 லட்சம் கேட்டு அடித்து, துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தபோதும் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே, வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் மாமியார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு கணவர் கலையரசன் மற்றும் கைக்குழந்தையோடு மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த யுகாஷினி(22) என்பவர் இன்று அவரது குழந்தை மற்றும் கணவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் எனது கணவர் கலையரசனுடன் வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது மாமியார் ருக்குமணி, வரதட்சணைக் கேட்டு தொடர்ந்து தொல்லை தந்து வருகிறார். ஏற்கனவே கணவருக்கு அரசாங்க வேலை வாங்குவதாக ஒன்றரை லட்சம் கேட்டார். அதன்பின்னர் கடன் இருந்ததற்காக நகைகளை கேட்டு வாங்கினார். தற்போது, மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ. 2 லட்சம் கேட்டு அடித்து, துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தபோதும் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே, வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தும் மாமியார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு கணவர் கலையரசன் மற்றும் கைக்குழந்தையோடு மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தார்.