நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று தொடங்கியது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று தொடங்கியது.

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62 பழக்கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவு பணியை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பபிதா இன்று தொடங்கி வைத்தார். இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 110 வகையான உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நடவு பணிக்காக முதன் முறையாக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் 84 பேர் நடவு பணியில் ஈடுபட்டனர். இந்த பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் மே மாதத்தில் நடைபெறும் பழக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 62 பழக்கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவு பணியை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பபிதா இன்று தொடங்கி வைத்தார். இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 110 வகையான உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நடவு பணிக்காக முதன் முறையாக அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் 84 பேர் நடவு பணியில் ஈடுபட்டனர். இந்த பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் மே மாதத்தில் நடைபெறும் பழக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.