நீலகிரியில் குறும்பர் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி: கூடலூர் காரமூலா கிராமத்தில் வசிக்கும் குறும்பர் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: கூடலூர் காரமூலா கிராமத்தில் வசிக்கும் குறும்பர் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூடலூர் பகுதியில் பிதரகாடு அருகே உள்ள காரமூலா கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குறும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் உதவி திட்டங்களைப் பெற முடிவதில்லை எனவும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இக்கிராமத்தில் சாலை வசதிகள் முறையாக இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியை கடந்து, நடந்து செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதாகவும், அவசர காலங்களில் தங்கள் கிராம பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரமுடியாத சூழ்நிலை உள்ளதாகவும் தங்கள் கிராம பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் சாதி சான்றிதழ்கள் வழங்க கோரியும் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்பர் பழங்குடியின மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...