கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமையை காக்க ஒரு லட்சம் பேரிடம் கையெப்பம் பெற்று பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரம் பேர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.
கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமையை காக்க ஒரு லட்சம் பேரிடம் கையெப்பம் பெற்று பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரம் பேர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதவைக் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக சுமார் இரண்டாயிரம் பேர் கோவை அண்ணா சிலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று ஒரு லட்சம் பேர் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஆட்சியர் கு.இராசாமணியிடம் வழங்கினர்.

மேலும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள், மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி வருகின்ற சூழலில் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முடிவு எடுக்க வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.