உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

கோவை: உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கி தர கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் உள்ளூர் உழவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு கடைகள் இல்லை என்றும் மலை மாவட்டங்களான நீலகிரி, ஊட்டி போன்ற இடங்களில் இருந்து வரும் காய்கறிகளை விற்பதற்கு உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளூர் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி விற்பதற்கு ஆர்.எஸ்.புரம் சிங்காநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் போன்ற பல பகுதிகளில் விவசாயம் செய்து கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை விளைவித்து வருவதாகவும் ஆனால், அதை உழவர் சந்தைகளில் விற்பதற்கு இடம் தரப்படவில்லை என்று தெரிவித்தார். 



இது உள்ளூர் விவசாயிகளை புறக்கணிக்கும் செயலாக இருப்பதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக கோவையில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளில் உள்ளூர் விவசாயிகளுக்கும் இடம் ஒதுக்கித் தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...