வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

கோவை: வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தோனிமுடி எஸ்டேட். இங்குள்ள கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் நடைபெறவுள்ள திருவிழாவிற்கான பந்தல் போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சுரேஷ் (42) என்ற தொழிலாளி அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று விட்டு கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் சத்தம் போட்டவாறே ஓடினர். அப்போது ஓடிய சுரேஷ் கால் இடறி கீழே விழுந்தார். அவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சுரேஷின் சடலத்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவ மணைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் செல்வன், சுரேஷின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் வனத்துறையின் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.50 ஆயிரத்தை வழங்கினார். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இச்சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...