கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வறிக்கை தயார்..! 136 கி.மீ.,தூரம் செயல்படுத்த திட்டம்

கோவை: கோவை மாநகரில், நான்கு வழித்தடங்களில் 136 கி.மீ., நீளத்துக்கு, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, தமிழக அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகரில், நான்கு வழித்தடங்களில் 136 கி.மீ., நீளத்துக்கு, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, தமிழக அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நகரில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வெள்ளலூர் பகுதியில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், கோவை மாநகரில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விமான நிலையம் விரிவாக்கப் பணி உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்' என்று தமிழக முதலமைச்சர், கடந்த 2017ல் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, 'சிஸ்ட்ரா' என்ற சர்வதேச நிறுவனம், மத்திய அரசுக்கு சொந்தமான 'ரைட்ஸ்' நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தினர், தங்களது ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். நான்கு வழித்தடங்களில், 136 கி.மீ., நீளத்துக்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் வகையில், அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த வழித்தடங்கள்‌?

1. காரணம்பேட்டை முதல்‌, திருச்சி சாலை, தடாகம்‌ சாலை வழியாக தண்ணீர்‌ பந்தல்‌ பகுதி வரை, 42 கி.மீ.

2. கணியூர்‌ முதல்‌, அவிநாசி சாலை வழியாக, உக்கடம்‌ பஸ்‌ நிலையம்‌ வரை. 26 கி.மீ.

3. பிலிச்சி முதல்‌. மேட்டுப்பாளையம்‌ சாலை வழியாக உக்கடம்‌ பஸ்‌ நிலையம்‌ வரை, 24 கி.மீ.,

4. கணேசபுரம்‌ முதல்‌ சத்தியமங்கலம்‌ சாலை. பேரூர்‌ சாலை வழியாக காருண்யா நகர்‌ வரை. 44 கி.மீ.

கோவையில்‌ உக்கடம்‌ மற்றும்‌ காந்திபுரம்‌ பகுதிகளில் ரயில் நிலையம் அமைக்க ஆலோசனை செய்யப்பட்டது. உத்தேச வழித்தடங்களை பரிசீலித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி, அரசின் வெவ்வேறு துறையினரும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறையினர், திட்ட வழித்தடங்களில் எதிர்காலத்தில், ஏதேனும் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்று கருத்து கோரப்பட்டது.

இந்த திட்ட வழித்தடங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பாலம் விரிவாக்கம் மற்றும் உக்கடம்-சுங்கம் சந்திப்பில், உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள இடத்தில் மேம்பாலத்தினை ஒரு உயரமான வளையமாக உருவாக்க பரிந்துரைத்துள்ளனர்.

"காரணம்பேட்டை மற்றும் தண்ணீர்‌ பந்தல்‌ வழித்தடங்களை உக்கடம்-சுங்கம் பைபாஸ் வழியாக இணைப்பதற்கு தரைமட்ட நடைபாதை பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், இது மேம்பாலம் திட்டத்தின் முன்மொழியப்பட்ட வடிவமைப்பைப் பாதிக்கலாம். மேலும், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ரயில் பாதையை சாலையில் அமைக்க தேவையான 10 மீட்டரை வழங்குவது கடினம் என்று மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் தீர்வு காண சி.எம்.ஆர்.எல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், டிசம்பரில் நடைபெற்ற முதல் கூட்டத்தின் போது, உக்கடம்-சுங்கம் பைபாஸ் வழியாகச் செல்வதற்குப் பதிலாக லங்கா கார்னர் வழியாக நடைபாதையை அமைக்க பரிந்துரைத்தது.

1.97 கி.மீ நீளமுள்ள உக்கடம் மேம்பாலம் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டதால், ஆத்துப்பாலம் மற்றும் டவுன்ஹால் என மேம்பாலத்தின் இருபுறமும் மாற்றங்களைச் செய்ய முன்மொழிந்தது. ஆத்துப்பாலம் வரை 600 மீட்டர் தூரத்திற்கு மேம்பாலத்தை நீட்டித்தும் நாஸ் தியேட்டரிலிருந்து 244 மீட்டர் மேம்பாலத்தை தொலைவை குறைத்து அதற்கு பதிலாக மேம்பாலத்தினை ஒரு உயரமான வளையமாக உருவாக்கி டவுன்ஹால் மற்றும் சுங்கம் வழித்தடங்களை இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ திட்டமானது கோவை மாநகரில் ஒரு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமாகும், இது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மிக அதிக செலவில் செயல்படுத்தப்படுவதால் மற்றும் நகரத்தின் நிலப்பரப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துடன் கோவையை இணைக்கப்பட்ட பின்னர் ஒரு புதுமையான தோற்றத்தை கொண்டு ஒரு புதிய சகாப்தமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...