கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு; 11,229 பேர் எழுதினர்

நீலகிரி: கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு இன்று உதகையில் நடைபெற்றது. இதில் 11,229 பேர் தேர்வு எழுதியதாக கோவை மண்டல ஐஜி கார்த்திகேயன் தெரிவித்தார்.

நீலகிரி: கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு இன்று உதகையில் நடைபெற்றது. இதில் 11,229 பேர் தேர்வு எழுதியதாக கோவை மண்டல ஐஜி கார்த்திகேயன் தெரிவித்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. 



இதை ஆய்வு செய்த மேற்கொண்ட கோவை மண்டல ஐஜி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மண்டலத்தில் 11,299 பேர் தேர்வு எழுதுவதாகவும் இதில் கோவையில் 5486 பேரும், ஈரோட்டில் 2862 பேரும், திருப்பூரில் 2200 பேரும், நீலகிரியில் 681 பேரும் தேர்வு எழுதி வருவதாக கூறினார்.

இதேபோல், காவல்துறையில் பணிபுரியும், காவலர்களுக்கு தேர்வு இன்று நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதனிடைய கோவை, நீலகிரி எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நீலகிரி, கோவை எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், எல்லையோர சோதனைச் சாவடிகள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடகா காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் நீலகிரி, கோவை எல்லையில் இல்லை என்றார்.

மேலும், கீழ் கோத்தகிரியில் இரு பழங்குடியினர்கள் மர்மமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாகத் தனிப்படை அமைத்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கூறினார். இந்த சந்திப்பின் போது நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உடனிருந்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...