அன்னூரில் பேக்கரியில் தீ விபத்து; ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

கோவை: கோவை அடுத்த அன்னூரில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமா‌ர் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.


கோவை: கோவை அடுத்த அன்னூரில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமா‌ர் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. 

கோவை மாவட்டம் அன்னூரில் கோவை செல்லக்கூடிய சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பேக்கரி நடத்தி வருபவர் பழனிச்சாமி. இவர் பேக்கரி மற்றும் மளிகை கடை என இரண்டையும் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் காலை முதல் இரவு வரை வியாபாரத்தை முடித்த கொண்டு இரவு கடையை மூடிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் இன்று அதிகாலை கடையின் வெளிப்புறத்தில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் தார்பாயில் திடீரென தீ பிடித்துள்ளது மெல்ல மெல்ல தீ பரவிய நிலையில் பின்னர் முழுமையான கடைக்குள்ளும் பிடிக்க துவங்கியுள்ளது. 



இதனையடுத்து, மளமளவெனப் பரவிய தீ பேக்கரியில் பரவ அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை கடையின் உள்ளே இருந்த மளிகை பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் தீயில் முழுமையாக எரிந்து நாசமானது. 

மேலும், பேக்கரியில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த 5 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் பயங்கர வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் சம்வ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், முழுமையாகத் தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெறும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...