மேட்டுப்பாளையத்தில் குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்த தந்தையை வெட்டி கொன்ற மகனால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சிராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (48) முன்னாள் ராணுவீரர் இவருக்கு அமுதவள்ளி (42) என்ற மனைவியும் சச்சின்குமார் (17) என்ற மகனும் உள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சிராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (48) முன்னாள் ராணுவீரர் இவருக்கு அமுதவள்ளி (42) என்ற மனைவியும் சச்சின்குமார் (17) என்ற மகனும் உள்ளனர். 



இந்நிலையில், கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் மனைவி அமுதவள்ளியும் மகன் சச்சின்குமாரும் கடந்த 6 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

மகன் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு கருப்புசாமி தன் மனைவிக்கு போன் செய்து பேச வேண்டும் என வீட்டிற்கு வரச் சொல்லி உள்ளார். அதையடுத்து, அமுதவள்ளிமற்றும் மகன் வீட்டிற்கு சென்று உள்ளனர்.அப்போது அங்கு குடிப்போதையிலிருந்த கருப்புசாமி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார், ஒரு கட்டத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் கைத்தகராறு ஏற்பட்டு கருப்புசாமி அரிவாள் எடுத்து மகனை வெட்ட முயற்சி செய்தபோது, மகன் அரிவாளை பிடிங்கி அப்பாவை சரமரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர்கள் திலக், பிரபாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்விற்காக வைத்து உள்ளனர்.

மேலும் தந்தையை வெட்டிய மகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...