கோவையில் உள்ள நான்கு தனியார் கல்லூரிகளில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது

கோவை: கோவை மாநகரில் உள்ள நான்கு தனியார் கல்லூரிகளில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்திய உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.


கோவை: கோவை மாநகரில் உள்ள நான்கு தனியார் கல்லூரிகளில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்திய உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்று உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்வுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்துகிறது.

இதில் கோவை மாநகரில் பிஎஸ்ஜி கல்லூரி, ஜி ஆர் டி கல்லூரி, எஸ் என் ஆர் கல்லூரி மற்றும் என் ஜி பி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணிக்கு தேர்வு நிறைவு பெற்றது.

மேலும் இந்த தேர்வு விவரம் குறித்து கோவை மாநகர காவல் துறையினர் கூறும்போது :-

உதவி ஆய்வாளர்க்கான எழுத்துத்தேர்வில் மொத்தம் 5,486 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 3,833 பேர் இன்று தேர்வு எழுதினர். 1653 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

அதேபோல பெண்கள் பிரிவில் 749 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 495 பேர் தேர்வு எழுதினர். 254 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவித்தனர் .

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...