கோவை மாவட்ட துணைத் தலைவராக அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி தேர்வு

கோவை: அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கோவை: அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் முறையே மாவட்ட குழு தலைவர், மாவட்ட குழு துணைத் தலைவர், ஒன்றிய துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிய நாயக்கன்பாளையம் ஐந்தாவது வார்டு கார்த்திக் 4 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.



இதனையடுத்து, துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே அமுல் கந்தசாமிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்திமதி மற்றும் கட்சியினர் அவருக்கு பூங்கொத்து மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...