கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை - அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை: நகர் புற உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய ஆதரவு அதிமுகவிற்கு இருக்கும் எனவும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை: நகர் புற உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய ஆதரவு அதிமுகவிற்கு இருக்கும் எனவும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 80 சதவீத வெற்றியையும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வெற்றியையும் கொடுத்தற்கு வாக்காளர்களுக்கு நன்றி", என கூறினார்.

மேலும், குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாக கோவையை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் இன்று முதல்வரை சந்திக்கின்றனர் என கூறிய அவர், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் இந்த அரசு ஏற்படுத்தி இருக்கின்றது என தெரிவித்தார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கி இருக்கின்றார், என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் மதிப்பினாலான பொங்கல் பரிசு கொடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர், நகர் புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிவித்தார்.

நகர் புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய ஆதரவு அதிமுகவிற்கு இருக்கும் என தெரிவித்தார். 

"கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்", என பெருமையாக தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...