கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில் இருளர் பழங்குடியினர் இருவர் படுகொலை; போலீசார் விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் திம்மன் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மெட்டுக்கள் ஆதிவாசி கிராமத்தில் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் திம்மன் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டுக்கல் இருளர் இன கிராமத்தில் 20க்கும் குறைவான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் மேரக்காய் பயிரிட்டுள்ளனர். இவற்றை பாதுகாப்பதற்காக ராமச்சந்திரன் மற்றும் திம்மன் ஆகியோர் நேற்று இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை பார்க்கும் பாேது இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.



இப்பகுதி வனப்பகுதி என்பதால் சாதாரண காவலர்கள் சென்று வருவதில் சிக்கல் உள்ளதாலும், நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அதிரடிப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக ஆதிவாசி மக்களை அவ்வப்போது மூளைச்சலவை செய்து மாவோயிஸ்ட்கள் தங்களது இயக்கத்தில் சேர்க்க முயல்கிறார்கள் என்று காவல்துறையினர் கூறி வரும் நிலையில், இந்த சம்பவத்திற்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தொடர்பிருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...