வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா

கோவை: வால்பாறை தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் விழாவை முன்னிட்டு இலவச வேட்டி சேலை, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி. ஏலக்காய், கரும்பு துண்டுடன் ரூ 1000ம் ரொக்கம் இன்று வழங்கப்பட்டது.

கோவை: வால்பாறை தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் விழாவை முன்னிட்டு இலவச வேட்டி சேலை, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி. ஏலக்காய், கரும்பு துண்டுடன் ரூ 1000ம் ரொக்கம் இன்று வழங்கப்பட்டது. 



இதனை முன்னிட்டு வால்பாறை பகுதியில் உள்ள 48 நியாய விலை கடைகள் மூலம் 17500 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு இன்று மாலை துவக்கி வைத்தார். 



வால்பாறையை அடுத்த கருமலை தேயிலை தோட்டத்தில் 450 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அவர் வழங்கினார். தொடர்ந்து, வால்பாறை நகரில் கோஆப்பரேட்டிவ் காலணியில் உள்ள சிந்தாமணி மார்க்கெட் பகுதியில் உள்ள அமுதம் மற்றும் ஸ்டான்மோர் சந்திப்பில் உள்ள சிந்தாமணி கடைகளில் பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். 

உடன் கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில்கனேசன், வட்டாட்சியர் வெங்கடாசலம், அம்மா பேரவை நரசப்பன், சௌந்தர்ராஜன் உட்பட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...