உதகையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பவானீஸ்வரர் கோவில் தேர்திருவிழா; பாரம்பரிய நடனத்துடன் தொடக்கம்

நீலகிரி: உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலின் 108ம் ஆண்டு தேர்த்திருவிழாவில் தோடர் இன பழங்குடியினர் ஆடிய பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

நீலகிரி: உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவிலின் 108ம் ஆண்டு தேர்த்திருவிழாவில் தோடர் இன பழங்குடியினர் ஆடிய பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 108-ம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் ஊர்வலம் இன்று நடைபெற்றது.



அப்போது, தேரை நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். தேர் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.



இதனை தொடர்ந்து, ஒன்று கூடிய தோடர் இன பழங்குடியின ஆண்கள் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர். அப்போது, அவர்கள் வருகின்ற புத்தாண்டில் நல்ல மழை பெய்ய வேண்டும், மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என தங்களது மொழியில் பாடியவாறே நடனமாடினர். உதகை நகரில் தோடர் இன பழங்குடியின மக்கள் ஆடிய பாரம்பரிய நடனத்தை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...