கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆஷி கோஷ் உள்பட பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மாணவர்கள் தேசிய கீதம் பாடினார். ஆனால், காவல் துறையினர் தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து தேசிய கீதம் பாடி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.