கோவையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜீ.வி ரெஸிடென்சி குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜீ.வி ரெஸிடென்சி குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜீ.வி ரெஸிடென்சி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறுகையில், மாநகராட்சி பகுதி முழுவதும் இன்றைக்கு இருக்கக்கூடிய மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை எல்லாம் அந்த பகுதியின் ஒரு பகுதியில் கொட்டி உரம் தயாரிக்கக் கூடிய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை, மைதானம், பூங்கா போன்ற பொது இடங்களில் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு மாத காலமாக செயல்படுத்தி பணிகளை துவக்கி இருக்கிறது.

இதன் ஒருபகுதியாக, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக இதை செயல்படுத்துவதாகவும் இந்த பகுதியால் அதை செயல்படுத்தக் கூடாது என்று இந்த பகுதி மட்டுமல்லாமல் அருகில் இருக்கக்கூடிய பெரியார் நகர், அன்னை இந்திரா நகர், பாரதி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இந்த பகுதி முழுக்க கூடிய பொது மக்கள் அத்தனைபேரும் இருக்கக்கூடிய பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் மிகக்கடுமையான ஆட்சேபனை தெரிவித்து வருவதாகவும் கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகளை எடுக்காமல் குப்பை மேடுகளாக காட்சியளித்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இந்தத் திட்டத்தால் இந்த நகரத்தை குப்பை நகரமாக மாற்றுவதற்கு இந்த அரசும் மாநகராட்சி நிர்வாகமும் முயற்சி செய்து வருவதாகவும் மக்கள் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான இடத்தில் எந்த இடத்தில் வைத்தாலும் ஆட்சேபனையில்லை என்று கூறிய அவர், மாநகராட்சி நிர்வாகம் இந்த குப்பை கிடங்குகளை ஊருக்குள் கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் தொடர் போராட்டம் மட்டுமல்ல, மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட கூடிய ஒரு போராட்டத்தை வெகு விரைவில் நடத்தப்படும் என்று கூறினார். இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...