கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான அரிசி, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவையும் ரொக்க பணம் ஆயிரம் கொண்ட பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான அரிசி, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவையும் ரொக்க பணம் ஆயிரம் கொண்ட பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாலான பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு தமிழர் குடும்பமும் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் மட்டும் ஒரு கோடியே 81 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தினை இன்று மேட்டுப்பாளையம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடத்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் தாலுக்கா முழுவதும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் துவங்கிய இந்த பொங்கல் பரிசு திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் அனைத்து ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாலான பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு தமிழர் குடும்பமும் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் மட்டும் ஒரு கோடியே 81 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தினை இன்று மேட்டுப்பாளையம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடத்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் தாலுக்கா முழுவதும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் துவங்கிய இந்த பொங்கல் பரிசு திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் அனைத்து ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.