கோவையில் புத்தகங்களை கொண்டு திருவள்ளுவர் உருவம்..! பள்ளி மாணவர்களின் கின்னஸ் சாதனை முயற்சி

கோவை: கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளியை சேர்ந்த 170 மாணவர்கள் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை 29,971 புத்தகங்களை கொண்டு கின்ன்ஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

கோவை: கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளியை சேர்ந்த 170 மாணவர்கள் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை 29,971 புத்தகங்களை கொண்டு கின்ன்ஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.



கேம்போர்டு பள்ளியில் காலை எட்டு முப்பது மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் நீடித்து பத்து மணியளவில் முடிவு பெற்றது. 



பன்னிரெண்டாயிரம் சதுர அடி பரப்பில் புத்தகங்களை கொண்டு இதனை மாணவர்கள் இந்த சாதனை முயற்சி மேற்கொண்டனர். 14 வண்ணங்கள் கொண்ட நோட்டு புத்தகங்களை கொண்டு திருவள்ளுவர் வண்ண உருவத்தை வடிவமைத்து இருந்தது அனைவரையும் கவர்ந்தது.



இது குறித்து பள்ளி தாளாளர் பூங்கோதை கூறுகையில், ஆசிரியர்களில் வழிகாட்டுதலோடு இந்த முயற்சியை மாணவர்கள் மேற்கொண்டதாகவும் திருவள்ளுவர் தினத்தையொட்டி வான் புகழ் கொண்ட வள்ளுவர் புகழ் போற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த மொசைக் திரு உருவப்பட முயற்சி இதுவரை எங்கும் பதியப்படவில்லை என்றார்.



இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு அபுதாபியில் 702.8 சதுரடியில் அமைக்கப்பட்டு இருப்பதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. 



தற்போது 1114.82 சதுரடியில் அமைக்கப்பட்டு உள்ளதால் கின்னஸ் சாதனையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.



கடந்த 2013ம் ஆண்டு அஞ்சல் அட்டை கொண்டு புலி வடிவம் அமைத்து இருந்தனர். இதனையடுத்து 2017ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திருவுருவத்தை பேப்பர் கப் கொண்டு உருவாக்கினர். தற்போது திருவள்ளுவர் உருவப்படத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...