கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு அரசு நிதி உதவி பெறும் துவக்க பள்ளி இயங்கி வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு அரசு நிதி உதவி பெறும் துவக்க பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி 1958ல் கட்டப்பட்டது. பள்ளிக்கூடத்தின் பக்கவாட்டு சுவர்கள் காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்திருந்தது. அதை பழுது பார்க்கும் பணிகள் தற்போது நடை பெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் மாணவர்கள் ஆசிரியர்கள் மதிய உணவுக்காக பள்ளிக்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு சென்று விட்டனர். மேலும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்களும் சென்று விட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளிக்கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக பள்ளிக்கூடத்தில் இருந்த பீரோ, மேஜை சேர் நாற்காலி பெஞ்ச் உட்பட அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன.
மேலும், மாணவர்கள் உணவுக்காக சென்ற படியால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளி 1958ல் கட்டப்பட்டது. பள்ளிக்கூடத்தின் பக்கவாட்டு சுவர்கள் காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்திருந்தது. அதை பழுது பார்க்கும் பணிகள் தற்போது நடை பெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் மாணவர்கள் ஆசிரியர்கள் மதிய உணவுக்காக பள்ளிக்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு சென்று விட்டனர். மேலும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்களும் சென்று விட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பள்ளிக்கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக பள்ளிக்கூடத்தில் இருந்த பீரோ, மேஜை சேர் நாற்காலி பெஞ்ச் உட்பட அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன.
மேலும், மாணவர்கள் உணவுக்காக சென்ற படியால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.