கோவையில் ரூ.7 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல்; வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

கோவை: கோவை ராஜவீதியில் உள்ள பேன்சி ஸ்டோர் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் மாநகர காவல்துறை அதிகாரிகளும் பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.


கோவை: கோவை ராஜவீதியில் உள்ள பேன்சி ஸ்டோர் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் மாநகர காவல்துறை அதிகாரிகளும் பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகரை பான்மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி தமிழ்ச்செல்வன் கூட்டாக பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர் .

இந்த நிலையில் இன்று வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பான்மசாலா குட்கா பொருட்கள் அதிக அளவில் பதுக்கப்பட்டு உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை ராஜா வீதியில் உள்ள சங்கர் ஃபேன்சி ஸ்டோரின் குடோனில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, அங்கு சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்த குழுவினர் பதுக்கி வைத்திருந்த நகாராம் (30) மற்றும் பேராராம் (28) ஆகிய சகோதரர்களை கைது செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

இதேபோல, கோவை மாநகர் முழுவதும் குட்கா பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் மீறி தமிழக அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் மாநகர காவல் துறையால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர் காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...