கோவை: வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை: வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியாக கடந்த 2008ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதுவரை வால்பாறை பேரூராட்சி நிர்வாகம் தனி அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. நகராட்சியாக மாற்றப்பட்ட பின் ஆணையாளர் பதவி நிரப்பப்படாமல் நகராட்சி பொறியாளர் பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை நகராட்சி அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பவன்ராஜ், வால்பாறை நகராட்சி பகுதிகளில் சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் வால்பாறை நகரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியாக கடந்த 2008ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதுவரை வால்பாறை பேரூராட்சி நிர்வாகம் தனி அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. நகராட்சியாக மாற்றப்பட்ட பின் ஆணையாளர் பதவி நிரப்பப்படாமல் நகராட்சி பொறியாளர் பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை நகராட்சி அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பவன்ராஜ், வால்பாறை நகராட்சி பகுதிகளில் சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் வால்பாறை நகரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.