கோவை: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு வால்பாறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு வால்பாறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் துவங்கி காந்தி சிலை வளாகத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, மறியலில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 21.000 வழங்க வேண்டும், தொழிலாளர்கள் சட்டத்தை மாற்றாதே, போனஸ் உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய், தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்யவேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, ஆன்லனை வர்த்தகத்தை தடைசெய் உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த மறியலில் தி.முக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் துவங்கி காந்தி சிலை வளாகத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, மறியலில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 21.000 வழங்க வேண்டும், தொழிலாளர்கள் சட்டத்தை மாற்றாதே, போனஸ் உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய், தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்யவேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, ஆன்லனை வர்த்தகத்தை தடைசெய் உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த மறியலில் தி.முக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.