கோவை: துணை சபாநாயகர் பெயரைச் சொல்லி தன்னை மிரட்டுவதாக திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.
கோவை: துணை சபாநாயகர் பெயரைச் சொல்லி தன்னை மிரட்டுவதாக திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.
திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமியின் மனைவி வேலுமணி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர் என்றும், திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதாகவும், அப்போது அதிமுகவைச் சேர்ந்த துணை சபாநாயகர் ஜெயராமனின் மாப்பிள்ளை என கூறி செந்தில் என்பவர் மற்ற அதிமுகவினருடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனவும் அதற்காக 5 லட்சம் தருவதாக கூறி தன்னை மிரட்டினர் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மிரட்டலையும் மீறி தேர்தலில் தான் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தன்னை தோற்கடித்து விட்டதாகவும் தற்போது பழி வாங்கும் நோக்கில் தன்னுடைய தோட்டத்தில் நடைபெற்று வரும் மாட்டுச் சந்தையில் அதிமுகவினர்களை தூண்டி விட்டு அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும் தன் மீது பொய் வழக்கு போடுவதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், தினமும் தனக்கு மிரட்டல் விடுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்த அவர், மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமியின் மனைவி வேலுமணி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர் என்றும், திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதாகவும், அப்போது அதிமுகவைச் சேர்ந்த துணை சபாநாயகர் ஜெயராமனின் மாப்பிள்ளை என கூறி செந்தில் என்பவர் மற்ற அதிமுகவினருடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனவும் அதற்காக 5 லட்சம் தருவதாக கூறி தன்னை மிரட்டினர் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மிரட்டலையும் மீறி தேர்தலில் தான் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தன்னை தோற்கடித்து விட்டதாகவும் தற்போது பழி வாங்கும் நோக்கில் தன்னுடைய தோட்டத்தில் நடைபெற்று வரும் மாட்டுச் சந்தையில் அதிமுகவினர்களை தூண்டி விட்டு அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும் தன் மீது பொய் வழக்கு போடுவதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், தினமும் தனக்கு மிரட்டல் விடுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்த அவர், மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.