கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம் 59 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம் 59 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோர்ந்த பொதுமக்கள் 59 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, செந்தில்குமார்ரத்தினம், ஏ.ஜெ.செந்தில்அரசன், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, உதவி ஆணையர் (பணியமைப்பு) சுந்தாராஜன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், பார்வதி, உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்களிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சோர்ந்த பொதுமக்கள் 59 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, செந்தில்குமார்ரத்தினம், ஏ.ஜெ.செந்தில்அரசன், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, உதவி ஆணையர் (பணியமைப்பு) சுந்தாராஜன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், பார்வதி, உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர் மாணிக்கம், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.