திருப்பூர்: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் தொழில் மாவட்டத்தில் சுமார் 1000 கோடி அளவிற்கு தொழில்கள் உற்பத்தி, வங்கிகள் பணப் பரிவர்த்தனை, அன்னிய செலாவணி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்படும்.
திருப்பூர்: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் தொழில் மாவட்டத்தில் சுமார் 1000 கோடி அளவிற்கு தொழில்கள் உற்பத்தி, வங்கிகள் பணப் பரிவர்த்தனை, அன்னிய செலாவணி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்படும்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, பொதுத் துறைகளை தனியார் வசம் ஒப்படைப்பது, தவறான சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் தொழிலாளர்களின் 44 சட்டங்களை மாற்றி 4 தொகுப்புகளாக பிரித்து தொழிலாளர்கள் உரிமைகளைப் பறித்தும் மக்கள் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வங்கிகளின் சங்கங்கள் உள்ளிட்ட 200 சம்மேளனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று தொழில் மாநகர் மாவட்டமான திருப்பூரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் குறைத்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. பின்னலாடை உள்ளிட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்கள் விசைத்தறி பாத்திர உற்பத்தி தொழில்களுக்கு இன்று தொழிலாளர்கள் செல்லாத காரணத்தினால் சுமார் 200 கோடி அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 354 வங்கி கிளைகளில் பெருவாரியான வங்கிகள் இன்று செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் இதில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால் பணப்பரிவர்த்தனை காசோலை பரிவர்த்தனை அன்னிய செலாவணி வர்த்தகம் என 800 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.