கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டன் பெட்ரோல் திருடியதாக ஒப்புக் கொண்ட காட்சியை நிர்வாக தரப்பினர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மணிகண்டன் பெட்ரோல் திருடியதாக ஒப்புக் கொண்ட காட்சியை நிர்வாக தரப்பினர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோவில் மணிகண்டன் கூறும்போது:-
பெரிய லோடாக வரும் பெட்ரோலில் இருந்து எங்களது வண்டிக்கு பெட்ரோலை எடுத்துள்ளோம்.
மேலும் பாபு ,ஜெயபால், இளையராஜா மற்றும் நான் என நான்கு பேரும் இந்த பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டுள்ளோம். முன்னால் சூப்பர்வைசர் சுபாஷ் சொல்லி தான் இந்த செயலில் ஈடுபட்டோம், என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிர்வாக தரப்பினர் திருடியதை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டதற்கு ஒப்புக்கொள்வதாக மணிகண்டன் தெரிவித்த வீடியோ காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றுவது தொடர்பான வீடியோ விவகாரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் சூழலில் பெட்ரோல் திருட்டு குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோவில் மணிகண்டன் கூறும்போது:-
பெரிய லோடாக வரும் பெட்ரோலில் இருந்து எங்களது வண்டிக்கு பெட்ரோலை எடுத்துள்ளோம்.
மேலும் பாபு ,ஜெயபால், இளையராஜா மற்றும் நான் என நான்கு பேரும் இந்த பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டுள்ளோம். முன்னால் சூப்பர்வைசர் சுபாஷ் சொல்லி தான் இந்த செயலில் ஈடுபட்டோம், என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிர்வாக தரப்பினர் திருடியதை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டதற்கு ஒப்புக்கொள்வதாக மணிகண்டன் தெரிவித்த வீடியோ காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றுவது தொடர்பான வீடியோ விவகாரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் சூழலில் பெட்ரோல் திருட்டு குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.