நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு உதவிகள் கிடைக்கின்ற வகையில் வரும் 9 ந் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள், நீலகிரி மாவட்டத்தில், ஆறு தாலூக்காக்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா கூறினார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு உதவிகள் கிடைக்கின்ற வகையில் வரும் 9 ந் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள், நீலகிரி மாவட்டத்தில், ஆறு தாலூக்காக்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா கூறினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் குழுக்களாக இணைந்து சுய தொழில் துவங்க முன் வந்தால், அரசு அனைத்து உதவிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
"நீலகிரி மாவட்டத்தில், இதுவரை 13,243 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், தையல் மிசின்கள், கண் கண்ணாடி, காசோலைகள் என 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட. உதவிகளை 75 மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது", என ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் உதகை பார்மஸி கல்லூரி முதல்வர் Dr. தனபால் மற்றும் மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் குழுக்களாக இணைந்து சுய தொழில் துவங்க முன் வந்தால், அரசு அனைத்து உதவிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
"நீலகிரி மாவட்டத்தில், இதுவரை 13,243 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், தையல் மிசின்கள், கண் கண்ணாடி, காசோலைகள் என 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட. உதவிகளை 75 மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது", என ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் உதகை பார்மஸி கல்லூரி முதல்வர் Dr. தனபால் மற்றும் மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.