நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர், நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை மற்றும் குழந்தைகள் சாப்பிடக் கூடிய தின்பண்டங்களில் கலப்படம் அதிகம் இருந்ததால் அதனை பறிமுதல் செய்து அழித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர், நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை மற்றும் குழந்தைகள் சாப்பிடக் கூடிய தின்பண்டங்களில் கலப்படம் அதிகம் இருந்ததால் அதனை பறிமுதல் செய்து அழித்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதி தேதியின்றி இருந்ததாலும் ரசாயன கலவைகள் கலந்திருந்ததாலும் அவற்றை பறிமுதல் செய்தனர். இதே போன்று, சுற்றுலா தலங்களில் குழந்தைகள் சாப்பிடக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்ட ஜெல்லி, குளிர்பானம், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு தின்பண்டங்கள் உண்பதால் நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு முப்பதாயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இனி வரும் காலங்களில் கடை வியாபாரிகள் இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதி தேதியின்றி இருந்ததாலும் ரசாயன கலவைகள் கலந்திருந்ததாலும் அவற்றை பறிமுதல் செய்தனர். இதே போன்று, சுற்றுலா தலங்களில் குழந்தைகள் சாப்பிடக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்ட ஜெல்லி, குளிர்பானம், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு தின்பண்டங்கள் உண்பதால் நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு முப்பதாயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இனி வரும் காலங்களில் கடை வியாபாரிகள் இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.