நீலகிரியில் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை விதித்ததற்கு எதிர்ப்பு; மலை தோட்ட காய்கறி விவசாயிகள், மார்கெட் வியாபாரிகள் கண்டன பேரணி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தும் மலைகாய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதற்கு மலை தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் உதகை மார்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தும் மலைகாய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதற்கு மலை தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் உதகை மார்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மலைகாய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் மீறுபவர்கள் மீது ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மலை காய்கறி விவசாயிகள், மலைத் தோட்ட காய்கறி விவசாயிகளுக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தக் கூடாது என்றும் பூச்சிகொல்லி மருந்துகள் இன்றி காய்கறிகளை சாகுபடி செய்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்றனர்.



மேலும், விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகமும், தமிழக தோட்டக்கலைத்துறையும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் இன்றி மலைகாய்கறிகளை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற தேவையான சோதனைகளை செய்த பிறகு, மலை மாவட்ட விவசாயிகளை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்ய அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி உதகையில் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். 



மார்கெட் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...