திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிராஜுல் இஸ்லாம் மஸ்ஜித் & மதரசா சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நொய்யல் வீதியில் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அதே போல் இந்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிப்பதோடு அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலை பாஜக தொடர்ந்து செய்து வருவதாகவும் நேற்றைய தினம் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை கண்டிப்பதோடு பாசிச பாஜகவின் இத்தகைய செயலை இனி மாணவர் சமூகமும் எதிர்த்து நிற்கும் எனவும் அதற்கு திமுக உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

சிராஜுல் இஸ்லாம் மஸ்ஜித் & மதரசா சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நொய்யல் வீதியில் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அதே போல் இந்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறையை வன்மையாக கண்டிப்பதோடு அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலை பாஜக தொடர்ந்து செய்து வருவதாகவும் நேற்றைய தினம் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை கண்டிப்பதோடு பாசிச பாஜகவின் இத்தகைய செயலை இனி மாணவர் சமூகமும் எதிர்த்து நிற்கும் எனவும் அதற்கு திமுக உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.