போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதை விட பங்கேற்பதே முக்கியம் - மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா

கோவை: போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதை விட பங்கேற்பது முக்கியம் என அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.


கோவை: போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதை விட பங்கேற்பது முக்கியம் என அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.

அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டிகள் கோவை கேரளா கிளப்பில் இன்று துவங்கியது. கேரளா கிளப் அணி, ஊடகங்களில் பணியாற்றுவோர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இன்று துவக்கி வைத்தார்.



பின்னர் அவர் பேசுகையில், போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதை விட அதில் பங்கேற்பது என்பது மிக முக்கியம் என்றார். தொடர்ந்து இது போன்ற போட்டிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் காவல்துறையினர் மற்றும் ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் அதிகப்படியான வேலை பளு உள்ள நிலையில், இது மாதிரியான விளையாட்டு போட்டிகள் அவர்களது மன அழுத்தத்தையும் குறைக்கும் என்றவர், இதனை ஒருங்கிணைத்த கிளப் நிர்வாகிகளுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இதனையடுத்து இப்போட்டிக்கான டி ஷர்ட்டை அறிமுகம் செய்த அவர், இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டார். வரும் 14ம் தேதி வரை இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இறுதி போட்டி 14ம் நடைபெற்று அன்றைய தினம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கேரள கிளப் தலைவர் ஸ்ரீ குமாரன், செயலாளர் சசிதரன், துனை தலைவர் பிரதீப் நம்பியார், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் குரியன் மற்றும் அல்ட்ரா குரூப் சேர்மன் சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...