நீலகிரியில் உபதலை ஊராட்சி மன்ற தலைவராக கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்ட முதல் பெண் தலைவர்

நீலகிரி: நீலகிரியில் 80 சதவீத இடங்களை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கைப்பற்றிய நிலையில், உபலை ஊராட்சி மன்றத்தை சுயேச்சை கைபற்றியது. உபதலை ஊராட்சியின் முதல் பெண் தலைவரும் குன்னூரில் உள்ள 6 பஞ்சாயத்தில் அதிக அளவாக 1319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளருமான சி. பாக்கியலட்சுமி கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார்.

நீலகிரி: நீலகிரியில் 80 சதவீத இடங்களை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கைப்பற்றிய நிலையில், உபலை ஊராட்சி மன்றத்தை சுயேச்சை கைபற்றியது. உபதலை ஊராட்சியின் முதல் பெண் தலைவரும் குன்னூரில் உள்ள 6 பஞ்சாயத்தில் அதிக அளவாக 1319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளருமான சி. பாக்கியலட்சுமி கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார்.



நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 80% திமுக கூட்டணியும், 8% சுயேச்சை உறுப்பினர்களும், 12% அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்களும் வெற்றிபெற்ற நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக உபதலை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த வே.சிதம்பரத்தின் மகள் சி.பாக்கியலட்சுமி 6 பஞ்சாயத்தில் அதிக பட்சமாக 1319 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.



பெண்கள் சமுதாயத்தில் முன்னேற பல்வேறு இடர்பாடுகள் உள்ள நிலையில் தனது தந்தை செய்த நற்பணிகளை தானும் செய்ய தந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததாக கண்ணீர் மல்க பதவி ஏற்றுக் கொண்டார்.



அப்போது, உபதலை ஊராட்சியில் தற்போதைய முக்கிய பிரச்சினையாக உள்ள சாலைப்பிரச்னை, குடிநீர் பிரச்சினை, வனவிலங்குகள் தொல்லைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைந்து பணிகள் மேற் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவருடன் 15 மன்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...