கோவை: கோவையில் ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து, சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர் சீரமைப்பு பணிகளுக்காக விடப்பட்ட 35 கோடி ரூபாய்க்கான டெண்டரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
கோவை: கோவையில் ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து, சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர் சீரமைப்பு பணிகளுக்காக விடப்பட்ட 35 கோடி ரூபாய்க்கான டெண்டரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

கூடலூர் சேரம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ராயின். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சாலைகளில் மற்றும் தடுப்புச் சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. கூடலூரில் இருந்து சேரம்பாடிவரை 30 இடங்களில் சாலைகள் மற்றும் தடுப்புச் சுவர்களை சரி செய்ய ரூ.35 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில், தனது அலைபேசி ஹாக் செய்யப்பட்டு டெண்டர் தொடர்பான அனைத்து தகவல் பரிமாற்றங்களும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த சிபி, தேவாலா பகுதியை சேர்ந்த அனிஷ் ஆகியோர் டெண்டரை பெற தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டுமென மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து, கோவை திருச்சி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தில் ராயின் புகார் மனுவை அளித்தார். இந்த புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட கண்காணிப்பாளர் சுரேஷ் 35 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டார்.