கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.
கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் அருகேயுள்ள லாரிப்பேட்டை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
முன்னதாக ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து லாரிப்பேட்டை வரை பேரணி நடத்தினர். நீண்ட தேசிய கொடிகளைப் பிடித்தபடியும், தேசிய கொடிகளுடனும் பேரணியில் பங்கேற்றவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டினை கைவிட கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், இதனை திரும்ப பெறப்படும் வரை போராட்டங்கள் நடத்தப்படுமெனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இந்த பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.