கோவை: கோவையில் சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து, பதிவிட்ட சூலூரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து, பதிவிட்ட சூலூரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் சைபர் பிரிவின் சமூக ஊடகப் பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ஒரு நபர் சிக்கியுள்ளார். அவரது கணக்கை போலீஸார் ஆராய்ந்தபோது சத்தியமூர்த்தி( 25) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.
மேற்படி நபர் சூலூரிலிருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சமூக
ஊடகப்பிரிவில் இருந்து சூலூர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமான புகார் அளிக்கப்பட்டது. பின்னர் புகாரின் பேரில் சூலூர் காவல்நிலைய குற்ற எண்: 09/2020, ச/பி. 13,14(1),15 of POCSO ACT 2012 r/w IT Act, -ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர் சூலூரில்
உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவனிடமிருந்த கைப்பேசியை ஆய்வு செய்த போது, அந்த கைப்பேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் இருந்ததை உறுதிப்படுத்தினர். விசாரணையில் தனது அப்பா பெயர் ராமசாமி என்றும் தான் கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல் கல்லூரியில் ஒட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் தான் அவினாசியில் உள்ள போதம் பாளையத்தில் வசித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தனக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும் தான் பார்க்கும் படங்களை மற்றவர்களும் பார்க்க தனது முகநூலில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததை
ஒப்புக்கொண்டார். மேலும், பதிவேற்றம் செய்த ஆபாசப்படத்தை தனது
கைப்பேசியில் வைத்திருந்தார். பின்னர் கைப்பேசியைக் கைப்பற்றி அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டம் சைபர் பிரிவின் சமூக ஊடகப் பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ஒரு நபர் சிக்கியுள்ளார். அவரது கணக்கை போலீஸார் ஆராய்ந்தபோது சத்தியமூர்த்தி( 25) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.
மேற்படி நபர் சூலூரிலிருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சமூக
ஊடகப்பிரிவில் இருந்து சூலூர் காவல்நிலையத்தில் எழுத்து மூலமான புகார் அளிக்கப்பட்டது. பின்னர் புகாரின் பேரில் சூலூர் காவல்நிலைய குற்ற எண்: 09/2020, ச/பி. 13,14(1),15 of POCSO ACT 2012 r/w IT Act, -ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர் சூலூரில்
உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவனிடமிருந்த கைப்பேசியை ஆய்வு செய்த போது, அந்த கைப்பேசியில் சிறார்களின் ஆபாச படங்கள் உட்பட பல ஆபாச படங்கள் இருந்ததை உறுதிப்படுத்தினர். விசாரணையில் தனது அப்பா பெயர் ராமசாமி என்றும் தான் கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல் கல்லூரியில் ஒட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும் தான் அவினாசியில் உள்ள போதம் பாளையத்தில் வசித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தனக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும் தான் பார்க்கும் படங்களை மற்றவர்களும் பார்க்க தனது முகநூலில் குழந்தைகளின் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததை
ஒப்புக்கொண்டார். மேலும், பதிவேற்றம் செய்த ஆபாசப்படத்தை தனது
கைப்பேசியில் வைத்திருந்தார். பின்னர் கைப்பேசியைக் கைப்பற்றி அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் மேற்படி நபர்களும் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் எச்சரித்துள்ளார்.