நீலகிரி: உதகை நகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி: உதகை நகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலான சாலைகளாக உள்ள நிலையில், வாகன போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வரும் சூழலில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உதகை நகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்து வருவது மட்டுமின்றி சாலைகளின் நடுவே நின்று கொண்டும், படுத்து கொண்டும் இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தாலும், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவது தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில், உதகை நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்படுவதோடு விபத்துகளும் நேரிடுவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.
நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலான சாலைகளாக உள்ள நிலையில், வாகன போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வரும் சூழலில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உதகை நகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்து வருவது மட்டுமின்றி சாலைகளின் நடுவே நின்று கொண்டும், படுத்து கொண்டும் இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தாலும், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவது தொடர் கதையாகவே உள்ளது.
இந்நிலையில், உதகை நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்படுவதோடு விபத்துகளும் நேரிடுவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.