நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராகிறார் திமுகவை சேர்ந்த பொன் தோஸ்

நீலகிரி: நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச்சேர்ந்த பழங்குடியின தோடர் இனத்தைச் சேர்ந்த பொன் தோஸ் தலைவராவது உறுதியாகியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச்சேர்ந்த பழங்குடியின தோடர் இனத்தைச் சேர்ந்த பொன் தோஸ் தலைவராவது உறுதியாகியுள்ளது.



நீலகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 6 பேரில் வார்டு 1 கூடலூரில் எம்.எம்.அனிபா சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்தவரும் வார்டு 2 கூடலூரில் பொன்தோஸ் திமுக, வார்டு 3 உதகையில் சசிகலா அதிமுக, வார்டு 4 கோத்தகிரி வனஜா திமுக, வார்டு 5 உதகை ராஜன் திமுக, வார்டு 6 குன்னூர் மீனா திமுக ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக திமுக 4, அதிமுக.1, சிபிஎம் 1, வெற்றி பெற்றதாலும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி தனித்தொகுதியாக எஸ்.டி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக கூட்டணியில் வென்றவர்களில் 5 உறுப்பினர்களில் யாரும் எஸ்.டி. வகுப்பில் பொன் தோஸ் (திமுக) மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுவைச் சேர்ந்த பொன் தோஸ் தேர்வுசெய்யப் படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட ஊராட்சி தலைவராக உள்ள பொன் தோஸ் கடந்த 2006 முதல் 2011 வரை கோடநாடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் கோடநாட்டில் விதிகளை மீறி பங்களா கட்டுவதாக கூறி அதற்கு நோட்டீஸ் வழங்கி அதனை இடிக்க பல்வேறு முயற்சிகளை செய்ததன் மூலம் பிரபலமானவர்.



மேலும், கோடநாடு எஸ்டேட் வழியாக காலகாலமாக அண்ணா நகர், காமராஜர் நகர் மக்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சென்று இந்த வழியைப் பயன்படுத்த கோடநாடு நிர்வாகம் அனுமதி மறுத்தது. பின்னர் அங்கு ஒரு தனியார் நிறுவனம் மூலம் சேதனை சாவடி அமைத்து அண்ணா நகர், காமராஜர் நகர் கிராம மக்கள் சென்று வர பல்வேறு கிடுக்குப் பிடிகளை கோடநாடு நிர்வாகம் செய்தது. இந்த சாலையை வழக்கம் போல் திறந்து விட ணே்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர். கோடநாடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக கோடநாடு பங்களா விதிமீறிக் கட்டப்பட்டதாக நோட்டீஸ் வழங்கியது, கோடநாடு எஸ்டேட் சாலையை அண்ணா நகர் காமராஜர் நகர் கிராம மக்கள் பயன்படுத்த தொடர்ந்து கோடநாடு நிர்வாகத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டவர்.

இவர் தோடர் இன பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்டி ரிசர்வ் என்பதால் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே பழங்குடியினரான பொன் தோஸ் வருகிற 11ம் தேதி நடை பெறவுள்ள மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தலைவராவது உறுதியாகியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...