மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர் பி்ஆர்.நடராஜன் ஆகியோர் கைது

கோவை: இந்திய மக்களின் மீது மோடி அரசின் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறி, ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் போர்க்குரல். காவல்துறை அனுமதி மறுத்தால் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் உள்ளிட்டோர் கைது.


கோவை: இந்திய மக்களின் மீது மோடி அரசின் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறி, ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் போர்க்குரல். காவல்துறை அனுமதி மறுத்தால் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் உள்ளிட்டோர் கைது. 

தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவும் அதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மக்களின் பொருளாதார வாழ்வு உரிமைகள் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் தாக்குதல்களை கண்டித்து, இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்தும் ஜனவரி 8 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்ட ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. 



இதன் ஒருபகுதியாக கோவையில் சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி்ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசு மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



இப்போராட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் சி. பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், சிவசாமி, தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...