நீலகிரி: உதகையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொட்டபெட்டா ஊராட்சியில் குளறுபடி நடந்துள்ளதாகவும் அப்பகுதியில் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
நீலகிரி: உதகையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொட்டபெட்டா ஊராட்சியில் குளறுபடி நடந்துள்ளதாகவும் அப்பகுதியில் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. உதகை ஊராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து முடிந்தது. இதில், உதகை தொட்டபெட்டா ஊராட்சி பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் எண்ணப்பட்ட வாக்குகளில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக அரசினர் விருந்தினர் மாளிகை அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டனர்.

மேலும், தொட்டபெட்டா ஊராட்சியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிகமாக குளறுபடி நடந்துள்ளதாகவும் முறையாக வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமென தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து விசாரித்த பின்பு அதற்கான முடிவு எடுக்கப்படும் என கூறியதையடுத்து மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. உதகை ஊராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து முடிந்தது. இதில், உதகை தொட்டபெட்டா ஊராட்சி பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் எண்ணப்பட்ட வாக்குகளில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக அரசினர் விருந்தினர் மாளிகை அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டனர்.

மேலும், தொட்டபெட்டா ஊராட்சியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிகமாக குளறுபடி நடந்துள்ளதாகவும் முறையாக வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமென தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து விசாரித்த பின்பு அதற்கான முடிவு எடுக்கப்படும் என கூறியதையடுத்து மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.