நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் கருகாமல் இருக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிகள் கருகாமல் இருக்க ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, மலைப் பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக உதகையில் தீட்டுக்கல், எமரால்டு, முத்தோரை, பாலடா பகுதிகளிலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெடுகுளா, கட்டபெட்டு, வ.உ.சி. நகர், கூக்கல்தொரை, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பல ஏக்கரில் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பனிப்பொழிவில் இருந்து மலைத் தோட்ட காய்கறி செடிகளை பாதுகாக்கும் வகையில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் காய்கறி செடிகள் பனிப்பொழிவால் கருகுவது தடுக்கப்படும். மேலும் விளைச்சலும் குறையாது. எனவே பலரும் தங்களது தோட்டங்களில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, மலைப் பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளும் பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக உதகையில் தீட்டுக்கல், எமரால்டு, முத்தோரை, பாலடா பகுதிகளிலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நெடுகுளா, கட்டபெட்டு, வ.உ.சி. நகர், கூக்கல்தொரை, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பல ஏக்கரில் மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பனிப்பொழிவில் இருந்து மலைத் தோட்ட காய்கறி செடிகளை பாதுகாக்கும் வகையில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் காய்கறி செடிகள் பனிப்பொழிவால் கருகுவது தடுக்கப்படும். மேலும் விளைச்சலும் குறையாது. எனவே பலரும் தங்களது தோட்டங்களில் ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.