கோவை: கோவை தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கோவை திமுக வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கோவை திமுக வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மசக்காளிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை ஆராவாரத்துடன் கொண்டாடினர்.
இதன் பின்னர் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறுகையில்:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமல், கிராம ஊராட்சி ஒன்றியக் குழு நடத்தும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமே இன்றைக்கு முதல் கட்டமாக தேர்தலை நடத்தியுள்ளதாகவும், பல்வேறு அத்துமீறல்களை கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய குழுக்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் அதேபோல ஊராட்சி மன்றங்களில், தமிழகம் முழுவதும் மகத்தான வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் பல்வேறு அரசின் அத்துமீறல்களுக்கு இடையிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியைத் தந்திருப்பதாக கூறிய அவர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் துவங்கியது முதல் திமுக வெற்றி பெற்ற இடங்களை அறிவிக்காமல் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தான் அறிவித்தனர் என குற்றம் சாட்டினார்.
அதிகார துஷ்பிரயோகம் தாண்டி திமுக முன்னிலை பெற்று உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களும் திமுக சார்பில் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மசக்காளிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை ஆராவாரத்துடன் கொண்டாடினர்.
இதன் பின்னர் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறுகையில்:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமல், கிராம ஊராட்சி ஒன்றியக் குழு நடத்தும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமே இன்றைக்கு முதல் கட்டமாக தேர்தலை நடத்தியுள்ளதாகவும், பல்வேறு அத்துமீறல்களை கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய குழுக்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் அதேபோல ஊராட்சி மன்றங்களில், தமிழகம் முழுவதும் மகத்தான வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் பல்வேறு அரசின் அத்துமீறல்களுக்கு இடையிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியைத் தந்திருப்பதாக கூறிய அவர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் துவங்கியது முதல் திமுக வெற்றி பெற்ற இடங்களை அறிவிக்காமல் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தான் அறிவித்தனர் என குற்றம் சாட்டினார்.
அதிகார துஷ்பிரயோகம் தாண்டி திமுக முன்னிலை பெற்று உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களும் திமுக சார்பில் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.