நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி வாளையார் மனோஜின் தந்தை இறந்ததால் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி வாளையார் மனோஜின் தந்தை இறந்ததால் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரை தவிர அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாளையார் மனோஜின் தந்தை செரு கோரன் (67) திருச்சூரில் மரணமடைந்தார். வாளையார் மனோஜ் அவருக்கு ஒரே மகன் என்பதால் ஈமச்சடங்கு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து வழக்குரைஞர் சிவக்குமார் வாளையார் மனோஜ்க்கு இடைக்கால ஜாமின் வழங்க ஊட்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வாளையார் மனோஜிற்கு 4 தினங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியும் வரும் 7ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். வாளையார் மனோஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நாளை காலை ஜாமினில் வர உள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரை தவிர அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாளையார் மனோஜின் தந்தை செரு கோரன் (67) திருச்சூரில் மரணமடைந்தார். வாளையார் மனோஜ் அவருக்கு ஒரே மகன் என்பதால் ஈமச்சடங்கு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து வழக்குரைஞர் சிவக்குமார் வாளையார் மனோஜ்க்கு இடைக்கால ஜாமின் வழங்க ஊட்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வாளையார் மனோஜிற்கு 4 தினங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியும் வரும் 7ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். வாளையார் மனோஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நாளை காலை ஜாமினில் வர உள்ளார்.